திருக்குறள்

904.

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.

திருக்குறள் 904

மனையாளை யஞ்சும் மறுமையி லாளன் வினையாண்மை வீறெய்த லின்று.

பொருள்:

மணம் புரிந்து புதுவாழ்வின் பயனை அடையாமல் குடும்பம் நடத்த அஞ்சுகின்றவனின் செயலாற்றல் சிறப்பாக அமைவதில்லை.

மு.வரததாசனார் உரை:

மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன், செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.

சாலமன் பாப்பையா உரை:

தன் மனைவிக்குப் பயந்து நடக்கும் மறுமைப் பயன் இல்லாதவனின் செயல்திறம் நல்லவரால் பாராட்டப்படாது.